கட்சியின் பெயர் தெரியாதவர்கள் மக்களுக்கு என்ன செய்வார்கள்!

0
278

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கட்சியின் பெயரையே ஏற்பாட்டாளர்கள் தவறாக எழுதியிருந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் – கொம்பனிப்புலம் பகுதியில் சஜித் கட்சி ஆதரவாளர்களினால் நேற்றையதினம் பிரச்சாரக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் போது மேடையின் பின்புலத்தில் கட்டப்பட்டிருந்த காட்சிப் பதாகையில் ஐக்கிய மக்கள் சக்தி என்ற பெயரை ஐக்கிய மக்கள் கட்சி என அச்சிடப்பட்டிருந்தது.

இதனைப் பார்வையிட்ட மக்கள் கட்சியின் பெயர் மாற்றப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பினர். மேலும் கட்சியின் பெயரே தெரியாதவர்கள் தேர்தலில் வெற்றி பெற்று மக்களுக்கு என்ன செய்வார்கள் எனவும் முணுமுணுத்ததாகவும் கூறப்படுகின்றது.