தேர்தல் ஆணைக்குழுவுக்கு 500 ரூபாவை அனுப்பிய யாழ் இளைஞர்!

0
246

உள்ளூராட்சி மன்ற சபைத் தேர்தலை நடத்த தன்னால் முடிந்த நிதியுதவியை தேர்தல் ஆணைக்குழுவிற்கு யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் அனுப்பி வைத்துள்ளார்.

தேர்தலை நடத்த நிதியில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) நாடாளுமன்றில் கூறியுள்ள நிலையில் குறித்த இளைஞன் இவ்வாறு பணத்தை அனுப்பி வைத்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவிற்கு 500 ரூபாய் பணத்தை அனுப்பிய யாழ்.இளைஞன்! | Jaffna Youth Sent 500Rs To Election Commission

காசுக்கட்டளை மூலம் 500 ரூபாய் பணத்தினை தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பியுள்ளார்.

யாழ் சுண்டுக்குளி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரே “தேர்தலை நடாத்தி ஜனநாயகத்தை நிலை நாட்டுவோம், சிறு துளி பெருவெள்ளம்” என தபாலகம் ஊடாக 500 ரூபாய் காசுக்கட்டளையை தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.