போலீஸ் போக்குவரத்து அதிகாரியை திடீரென அறைந்த பெண்!

0
301

பாதுகாப்பு தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணை தடுத்து நிறுத்திய வேளை ஜாஎல காவல்துறை போக்குவரத்து அதிகாரியின் காதில் குறித்த பெண் அடித்ததுடன் தனது மோட்டார் சைக்கிளையும் விட்டுச் சென்றதாக ஜாஎல காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

ஜாஎல பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் கடமையாற்றிய காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் காவல் துறையினருக்கு பயப்படாத பெண் நில் என்று கூறி தடுத்து நிறுத்திய கான்ஸ்டபிளின் காதில் அடித்துள்ளார். பெண் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த பெண் சீதுவ பிரதேசத்தில் வசிப்பவர் என்பதை அறிந்த காவல் துறையினர் அவரை தேடிச் சென்ற போது குறித்த பெண் நீண்ட நாட்களாக மனநல சிகிச்சை பெற்று வருவதாக வீட்டில் உள்ளவர்கள் காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.

மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜாஎல காவல்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.