பத்து வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை மிரட்டல்

0
237

பாடசாலை மாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் நான்கு சந்தேக நபர்களை புதன்கிழமை (15) கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெலிகமவில் பத்து வயது சிறுமியே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து தனது தாயிடம் தெரிவித்ததையடுத்து தாய் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவி கடந்த வெள்ளிக்கிழமை (10) கல்வி வகுப்பிற்குச் சென்று கொண்டிருந்த போது சந்தேக நபர்களால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பத்து வயது பாடசாலை மாணவியை வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் | School Girl Was Assaulted And With Death

மாணவியை துஷ்பிரயோகம் செய்ததுடன் சந்தேக நபர்கள் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பில் இருபது வயதுடைய நான்கு சந்தேக நபர்களும் புதன்கிழமை (15) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவி பரிசோதனைக்காக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.