திருமண நிகழ்வின் போது நடந்த வித்தியாசமான சம்பவம் ஒன்றின் மீது தற்போது உலகளவில் கவனம் பெற்றுள்ளது. குறித்த திருமண நிகழ்வு சீனாவில் நடைபெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் நடந்த திருமணத்தின் போது மணமகன் சென்னின் முன்னாள் காதலிகள் பலர் ஏற்பாடு செய்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இளம் பெண்கள் குழுவொன்று கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும் எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் காதலிகளிடம் குறித்த மணமகன் மன்னிப்பு கேட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த காலத்தில் தான் ஒரு நல்ல காதலன் இல்லை என அவர் கூறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் ஒவ்வொருவரும் தங்கள் தோழிகளுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.