போலி நோட்டுகளை கொடுத்து ஏமாற்றிய இரு பல்கலைக்கழக மாணவர்கள் கைது!

0
261

மூன்று போலி 5000 ரூபா நாணயத்தாள்களை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் அம்பாறை ஒலுவில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பழக்கடை ஒன்றில் பழங்கள் வாங்கிய மாணவர்கள் அதற்கு 5000 ரூபாய் நோட்டு கொடுத்ததாக அக்கரைப்பற்று போலீசார் தெரிவித்தனர்.

போலி நோட்டை கொடுத்து ஏமாற்றிய பல்கலைக்கழக மாணவர்கள்! | University Students Cheated

போலி நாணயத்தாள்கள்

அவர்கள் கொடுத்த ரூபாய் நோட்டு போலி என்பதை கவனித்த பழக்கடை உரிமையாளர் இது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று வந்து பல்கலைக்கழக மாணவர்கள் இருவரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்ததுடன் அவர்களிடம் இருந்து மேலும் இரண்டு ஐயாயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த கரன்சி நோட்டுகளை உண்மையான கரன்சி நோட்டுகளாக மாற்றி தருமாறு மற்றொரு நபர் கேட்டு தங்களிடம் கொடுத்ததாக மாணவர்கள் போலீசாரிடம் கூறியதாக கூறப்படுகிறது.

5000 போலி நாணயத்தாள்களை உண்மையான நாணயத் தாள்களாக மாற்றியதன் பின்னர் போலி நாணயத் தாள்களை வழங்கியவர் அதற்குக் கொமிஷன் கொடுப்பதாகத் தெரியவந்ததாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

போலி நோட்டை கொடுத்து ஏமாற்றிய பல்கலைக்கழக மாணவர்கள்! | University Students Cheated

மேலும் மாணவர்களுக்கு போலி நோட்டை வழங்கிய நபரை கைது செய்ய அக்கரப்பற்று பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.