யாழில் மூன்று தசாப்தங்களின் பின்னர் மக்களிடம் கையளிக்கப்படவுள்ள 108 ஏக்கர் காணி!

0
221

யாழ்ப்பாணம் வலி.வடக்கு பிரதேசத்தில் கடந்த 33 வருடங்களாக இராணுவ கட்டுப்பாட்டில் காணப்பட்ட 108 ஏக்கர் காணி நாளை 03 ஆம் திகதி யாழ்.மாவட்ட செயலரிடம் இராணுவத்தினரால் கையளிக்கப்படவுள்ளது.

அதன்படி காங்கேசன்துறை மத்தி ஜே/ 234 கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட வெளிச்ச வீட்டில் இருந்து துறைமுகம் வரையிலான 40 குடும்பங்களுக்கு சொந்தமான 26 ஏக்கர் காணியும் இதே கிராம சேவையாளர் பிரிவில் இராணுவத்தினரின் பொறியியல் பிரிவு அமைந்திருந்த 45 குடும்பங்களுக்கு சொந்தமான 24 ஏக்கர் காணியும் விடுவிக்கப்படவுள்ளது.

மேலும், மயிலிட்டி வடக்கு ஜே / 246 கிராம சேவையாளர் பிரிவில் 17 குடும்பங்களுக்கு சொந்தமான 16 ஏக்கர் காணியும் அன்றோனிபுரம் பகுதியில் 13 ஏக்கர் காணியும், நகுலேஸ்வரம் ஜே/ 226 கிராம சேவையாளர் பிரிவில் 20 குடும்பங்களுக்கு சொந்தமான 20 ஏக்கர் காணியும் நாளைய தினம் மக்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.