ராஜபக்ச குடும்பத்தின் வீழ்ச்சிக்கான காரணத்தை அம்பலப்படுத்திய மகிந்தவின் சகா..

0
220

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நாடாளுமன்ற விவகார செயலாளராக கடமையாற்றிய குமாரசிறி ஹெட்டிகே, ராஜபக்ச குடும்ப ஆட்சி வீழ்ச்சியடைந்தமைக்கான காரணத்தை வெளியிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்சவுடன் பல தசாப்தங்களாக நெருக்கமாகப் பணியாற்றிய அவர் குடும்ப அரசியல் வீழ்ச்சிக்கான காரணத்தை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,

 “கோட்டா கோ ஹோம்” என்ற வாசகம்

“கோட்டா கோ ஹோம்” என்ற வாசகம் யோஷித ராஜபக்சவுடன் தொடர்புடையது என திலித் ஜயவீர தெரிவித்த கருத்து சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இது ராஜபக்ச குடும்பத்தின் நடுவில் வீசப்பட்ட டைம் பாம் போன்றது.இது உண்மையா பொய்யா என்று தெரியவில்லை.எனினும், ராஜபக்ச அரசியலில் இருந்து அரசியல்வாதிகள் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

ராஜபக்ச குடும்பத்தின் வீழ்ச்சிக்கான காரணத்தை முதன்முதலில் அம்பலப்படுத்திய மகிந்தவின் நெருங்கிய சகா | Goverment Against Protest Rajapaksha Family

ராஜபக்ச அரசியலின் முத்திரை மகிந்த ராஜபக்ச.ஆரம்பத்தில் இருந்தே குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் வெளிச்சம் தந்தவர்.ஒரு ஜனரஞ்சக தலைவர். நல்ல உள்ளம் கொண்டவர். இதனால் பலர் அவரை நேசித்தனர். நாட்டுக்காக ஏதாவது செய்த தலைவர். அவர் கட்டமைத்த ஆளுமையால் மக்களின் விருப்பத்தால் இரண்டு முறை ஜனாதிபதியானார்.

கோட்டாபயவின் நிலைப்பாடு

ஆனால் அவர் ஒரு கட்டத்தில் தவறு செய்துவிட்டார்.குடும்பத்தில் ஒரு சிலர் அவரது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினர். அரசியலையும், ஆட்சியையும் இரண்டல்ல ஒன்றாகக் கருதியதே தவறு.

அரசியலிலும் ஆட்சியிலும் குடும்ப உறவினர்கள் தேவையில்லாமல் இணைக்கப்பட்டனர். அதனால், அதுவரையில் இருந்த பொது ஈர்ப்பும், அன்பும், மரியாதையும் பனிப்பாறையாக உருக ஆரம்பித்தது.

ராஜபக்ச குடும்பத்தின் வீழ்ச்சிக்கான காரணத்தை முதன்முதலில் அம்பலப்படுத்திய மகிந்தவின் நெருங்கிய சகா | Goverment Against Protest Rajapaksha Family

நீண்ட நாட்களாக தன்னுடன் இருந்த பல நண்பர்களை இழந்தார். கோட்டாபய ஜனாதிபதியான பின்னர் நிலைமை மேலும் குழப்பமடைந்தது.கட்டுப்பாடு அபத்தமானது.கோட்டாபய ஜனாதிபதியாகவும் உறவுமுறையை பலப்படுத்தினார்.

ஆட்சியைப் பிடித்தாலும் அதிகாரத்தைத் தக்கவைக்கும் நடைமுறை அறிவு அவருக்கு இல்லை.மகிந்தவின் அனுபவங்களில் இருந்து எடுக்க வேண்டியதை எடுக்கவில்லை. அரசியல் தெரியாததால், கோட்டாபய அவசரப்பட்டு மக்களின் வெறுப்புக்கும், கோபத்திற்கும் ஆளானார். கடைசியில் அவர் அனுபவித்த கதி எல்லோருக்கும் தெரியும்.

வீழ்ச்சிக்கான காரணம்

* பிரபலத்தை தவறாகப் புரிந்துகொள்வது.

* சுயநலம்.

* அதிகாரம் கொண்டு கர்வம் கொள்வது.

*அதிகாரம் எப்பொழுதும் இருக்கிறது என்று நினைப்பது.

* தங்களுக்கு இருந்த நல்ல நண்பர்களை இழப்பது.

* வரம்புகள் இல்லாமல் உறவுமுறையில் ஈடுபடுதல்.

இந்த காரணிகள் ராஜபக்சக்களின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தன. இது அவர்களுக்கு இன்னும் புரிகின்றதா என்பது ஒரு கேள்விக்குறி.

எதிர்காலத்தில் தலைவர்களாகக் காத்திருக்கும் அனைவரும் மேற்கண்ட உண்மைகளை நினைவில் வைத்துக் கொண்டால் நல்லது.