சொத்துக்காக தம்பதியினர் கொலை; விசாரணையில் வெளியான உண்மைகள்!

0
242

வீடொன்றினுள் வயோதிபத் தம்பதியினர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இச்சம்பவம் தென்னிலங்கையில் வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.

இந்த கொலைச் சம்பவம் அம்பலாந்தொட்ட பொலன ருஹுனு ரிதிகம 3 ஆம் மைல் பகுதியில் வீடொன்றினுள் நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் உயிரிழந்த நபரின் மைத்துனர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் வீட்டுக்குள் புகுந்து கோடரி மற்றும் கத்தியால் தம்பதியை தாக்கி இரட்டைக் கொலையைச் செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்தவர்கள் 61 வயதுடைய கணவன் மற்றும் 56 வயதுடைய மனைவி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நீண்டகால நிலத்தகராறு காரணமாக இந்தக் கொலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளின் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தொடர்புடைய செய்தி:

https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/2023/01/28/couple-hacked-to-death-by-breaking-into-a-house-in-sri-lanka/