கேமராவில் 400 செல்ஃபி எடுத்த கரடி!

0
241

அமெரிக்காவில் விலங்குகளை கண்காணிப்பதற்காக வைக்கப்பட்ட கேமராவில் கரடி ஒன்று 400 செல்பிகளை எடுத்துள்ளது.

நவீன உலகின் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாக மாறிவிட்டது சமூக வலைதளங்கள் அப்படி இணையத்தில் பல வேடிக்கையான காட்சிகள் நெட்டிசன்கள் மத்தியில் வைரலாவதுண்டு.

குழந்தைகளின் குறும்புதனம், மட்டுமில்லாமல் நாய், பூனை, யானை போன்ற விலங்குகளின் வீடியோக்களும் அவ்வபோது வைரலாகும்.

இந்தநிலையில் அமெரிக்காவில் விலங்குகளை கண்காணிப்பதற்காக வைக்கப்பட்ட கேமராவில் 400 செல்பிகளை கரடி வித்தியாசம் வித்தியாசமாக எடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.