ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் 42 விமானிகள் ராஜினாமா!

0
271

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் 42 விமானிகள் கடந்த வாரம் ராஜினாமா கடிதங்களைக் கையளித்ததாகவும், 85 விமானிகள் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் சான்றிதழ் கடிதங்களுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானி ஒருவர் 10,000 டொலர் மாதாந்த சம்பளமாகப் பெறுகிறார்.ஆனால் டொலர் மதிப்பு 225 ரூபா என்ற குறைந்த அளவில் கணக்கிடப்படுகிறது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் 42 விமானிகள் ராஜினாமா ! | 42 Pilots Hand In Resignation Letters

மற்ற சர்வதேச விமான நிறுவனங்களின் விமானிகளுக்கு 370 ரூபா என கணக்கிடப்பட்டுள்ளது. அவர்கள் 30,000 டொலர் முதல் 40,000 டொலர் வரை வரியில்லா சம்பளம் பெறுகிறார்கள் என்று அந்த அதிகாரி கூறினார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் சுமார் 240 விமானிகள் பணி புரிவதாகவும், சுமார் 80 விமானிகள் வெளியேறினால் இந்த வருடத்தின் நடுப்பகுதிக்குள் விமான சேவை கடும் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்றும் கடந்த டிசம்பர் மாதம் முதல் டொலர் 295 ரூபாவாக கணக்கிடப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.