38 வருடங்களுக்கு பிறகு தாயை தேடி வந்த இலங்கை பெண்!

0
360

38 வருடத்தின் பின்னர் தாயை தேடி இலங்கை வந்த நெதர்லாந்து பெண் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் ஒரு தாய்க்கு பிறந்த பெண் குழந்தையொன்று பொருளாதார நெருக்கடி காரணமாக 38 வருடங்களுக்கு முன்னர் நெதர்லாந்து தம்பதியினால் தத்தெடுக்கப்பட்டது.

இந்நிலையில் தனது பிறப்பு தொடர்பில் அறிந்த பெண் தனது தாயை தேடும் முயற்சியில் பல தடவைகள் இலங்கைக்கு வந்து சென்றுள்ளதுடன் தாயின் விபரங்களை திரட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இதற்கமைய தனது தாயின் புகைப்படம் தனது பிறந்த திகதி போன்ற சில விபரங்களை வைத்து பிறந்த வைத்தியசாலையை கண்டுபிடித்து தனது தாயை கண்டுப்பிடித்துள்ளார்.