தம்பனை பழங்குடியின குழந்தைகளுக்கு ஆங்கில மொழியை இலவசமாக கற்பிக்கும் திட்டத்தை பொலிஸார் தொடங்கியுள்ளனர்.
பழங்குடி இனத்தலைவர் உருவரிகே வன்னில பத்தனின் வேண்டுகோளுக்கு இணங்க தம்பனை சுற்றுலா பொலிஸாரின் தலையீட்டில் இந்த ஆங்கில கற்பித்தல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஆதிவாசிகளை சந்திக்க வரும் சுற்றுலா வழிகாட்டிகளில் சிலர் தங்களுக்கு சாதகமாக மொழியை பயன்படுத்துவதால் ஆதிவாசிகள் ஆங்கிலம் கற்க முயற்சித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.