பாரிஸ் பகுதியில் இருந்து அகதிகள் அதிரடியாக வெளியேற்றம்!

0
264

பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் Boulevard de la Villette பகுதியில் தங்கியிருந்த அகதிகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதன்கிழமை பகல் குறித்த பகுதிக்கு வந்த பொலிசார் சுகாதாரமற்ற மிக ஆபத்தான முறையில் தங்கியிருந்த அகதிகள் பலரை வெளியேற்றியுள்ளனர்.

மொத்தமாக 325 அகதிகள் வெளியேற்றப்பட்டு பேருந்துகளில் ஏற்றி பல்வேறு தங்குமிடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பிரான்ஸில் இந்த ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட முதலாவது அகதிகள் வெளியேற்றம் இதுவென கூறப்படுகிறது.

பாரிஸ் பகுதியில் இருந்து அகதிகள் அதிரடியாக வெளியேற்றம் | Police Clear Migrant Camp In Paris