தாயுடன் தகராறு; மாணவியின் முடியை வெட்டிய கணவன் மனைவி!

0
263

கணவனும் மனைவியும் 11 வயது பாடசாலை மாணவியின் தலைமுடியை வெட்டிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

குறித்த மாணவியின் தாயாருடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக பழிவாங்கும் நோக்கில் இந்தச் செயல் மேற்கொள்ளப்பட்டதாவும் கெஸ்பேவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாயாருடன் தகராறு; மாணவியின் தலைமுடியை வெட்டிய கணவன் மனைவி! | Husband And Wife Who Cut The Hair Of The Student

கணவனும் மனைவியும் குறித்த மாணவியின் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது மாணவி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். மாணவியிடம் அவரது தாயைப் பற்றி விசாரித்தபோது அவர் வீட்டில் இல்லை என்று கூறியதையடுத்து, தம்பதியினர் மாணவியைப் பிடித்து தலைமுடியை வெட்டியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தாய் வீட்டுக்கு வந்ததும் வெட்டிய தலைமுடியைக் காட்டி மாணவி நடந்ததைச் சொன்னதையடுத்து தாயும் மகளும் வெட்டிய தலைமுடியையையும் எடுத்துச் சென்று பொலிசில் புகார் அளித்துள்ளனர்.

சிறுமியின் வாக்குமூலத்தின்படி சந்தேகத்திற்குரிய கணவன் மற்றும் மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்,

அவர்கள் இருவரும் கஸ்பேவ பொலிஸ் பிரிவில் வசிப்பவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்காக வெட்டப்பட்ட முடிகளும் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன.