நடிகை திரிஷா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொழிலதிபர் வருண் மணியன் என்பவரை திருமணம் செய்யவிருந்தார். திருமணம் வரை சென்றாலும், திடீரென இருவரும் பிரிவதாக தகவல் வெளிவந்தது. திருமணமும் நின்றுபோனது.
இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தாலும், ஏன் இவர்களுடைய திருமணம் நின்றுபோனது என பல சர்ச்சைகள் அந்த சமயத்தில் எழுந்தது. அப்போது நடிகர் தனுஷுக்கும், நடிகை திரிஷாவிற்கு ஏற்பட்டநெருக்கமான தவறான உறவு தான் திரிஷா – வருண் திருமணம் நின்றுபோன காரணம் என்று தகவல் வெளியானது.
ஆனால், இதை முற்றிலுமாக திரிஷா மறுத்துள்ளார். ஆனால், திரிஷாவை திருமணம் செய்யவிருந்த வருண் இதனை நம்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் தான் இவர்களுடைய திருமணம் நின்றுபோனதாக தெரிவிக்கின்றனர்.