யாழ்.மாவட்ட கட்டளை தளபதி மற்றும் அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு!

0
294

யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட, கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேற்று சனிக்கிழமை (டிச. 31) சந்தித்து கலந்துரையாடினார்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில், அண்மைக்காலமாக அதிகரித்துள்ள மாடுகள் திருட்டு, போதைப்பொருள் பாவனை, வாள் வெட்டு உட்பட்ட சமூக விரோதச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பான விடயங்கள் பேசப்பட்டன.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாத வகையில், உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருக்கின்ற காணிகளை விடுவித்தல் பற்றியும் பாடசாலை மைதானம் போன்ற பொது இடங்களை புனரமைப்பதற்கு மேலும், இராணுவத்தினரின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பிரஸ்தாபிக்கப்பட்டது.