அரசாங்க ஊழியர்களுக்கு ஊதியமற்ற விடுமுறை; அரசாங்கம் தீர்மானம்

0
333

அரசாங்க ஊழியர்களுக்கு ஊதியமற்ற விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரசாங்க ஊழியர்களின் பணிமூப்பு மற்றும் ஓய்வூதியம் பாதிக்காத வகையில் கலாநிதிப் பட்டம் பெறுவதற்கு ஊதியமற்ற விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

3 வருடங்கள் ஊதியமற்ற விடுமுறை

அரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்: வெளியானது அறிவிப்பு | Government Worker Srilanka Publicworker Retirement

இது தொடர்பாக சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த சுற்றறிக்கையில்,இந்த தீர்மானம் செப்டெம்பர் 12, 2022 முதல் செல்லுபடியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை 3 வருடங்கள் வரை சம்பளமில்லாத படிப்பு விடுப்பு வழங்க முடியும் என பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.