மகள்களிடம் பாலியல் தொல்லை செய்த வளர்ப்பு தந்தை; நீதிமன்றத்தின் உத்தரவு!

0
508

2 சிறுமிகளை சில்மிஷம் செய்த வளர்ப்பு தந்தைக்கு ஈரோடு மகளிர் நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.

ஈரோட்டைச் சேர்ந்த பெண்ணிற்க்கு 2006ல் திருமணம் நடந்தது. இத்தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். கணவர் குடிகாரன் என்பதால் குடும்ப பிரச்சனை ஏற்பட்டது.

இதனால் கணவரை பிரிந்து பெண் குழந்தைகளுடன் தனியாக வாடகை வீட்டில் தங்கியுள்ளார். அதன் பிறகு அந்த பெண் தறி வேலைக்கு சென்று விட்டார்.

அப்போது, ​​அவருடன் பணிபுரிந்த சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியை சேர்ந்த 34 வயது வாலிபர், அந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு அந்த பெண்ணும், பையனும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

இதனால் அந்த பெண்ணின் 14 வயது மற்றும் 11 வயது மகளை அவரது முதல் கணவரிடமிருந்து வளர்ப்பு தந்தையாக கவனித்து வந்துள்ளார். இந்நிலையில், 14 வயது சிறுமியின் வளர்ப்புத் தந்தையான இளைஞர், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

மேலும், தனது செல்போனில் 11 வயது சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளார். வளர்ப்பு தந்தையின் தொல்லை தாங்க முடியாமல் சிறுமிகள் நடந்த சம்பவத்தை தாயாரிடம் தெரிவித்தனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண், ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஜனவரி 31ம் திகதி புகார் அளித்தார். பொலிசார் வழக்கு பதிவு செய்து வளர்ப்பு தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

2 சிறுமிகளிடம் சில்மிஷம் செய்த வளர்ப்பு தந்தைக்கு நேர்ந்த கதி! | The Fate Foster Father Who Molested 2 Girls

மேலும், அவர் மீது ஈரோடு மகளிர் கோர்ட்டில் பொலிசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மாலதி நேற்று தீர்ப்பு கூறினார்.

அதில், சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வளர்ப்பு தந்தைக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.50 ஆயிரம் நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்தார்.