அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு பெறும் வயதெல்லையை அறுபதாக வரையறுத்து அரசாங்கம் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
இந்த தீர்மானம் எதிர்வரும் 2023 ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி 55 வயது பூர்த்தியாகின்ற போது அல்லது அதன் பின்னர் அரசாங்கத்தின் எந்தவொரு ஊழியரையும் ஓய்வுபெறுவதற்கு பணிக்க முடியும்.
தகுதிவாய்ந்த அதிகாரி ஒருவரால் சேவையில் நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டாலன்றி அரசியலமைப்பின் மூலம் அல்லது ஏதேனும் சட்டத்தின் மூலம் கட்டாயம் ஓய்வுபெறும் வயது குறிப்பிட்டுள்ள ஊழியர்கள் 60 வயது பூர்த்தியடையும் போது கட்டாயம் சேவையிலிருந்து ஓய்வு பெற வேண்டுமென அதிவிசேட வர்த்மானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.