குவைத்தில் இருந்து நாடு திரும்பிய பெண்; இலங்கையில் வைரலாகும் புகைப்படம்!

0
415

குவைத்தில் இருந்து நாடு திரும்பிய இலங்கை பெண்ணின் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வைரலாகியுள்ளது. குருநாகல், மல்சிறிபுர பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் வெளிநாட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றிய வந்தார்.

அவரது கணவர் பல மாதங்களாக பிள்ளைகளை கைவிட்டுச் சென்ற நிலையில் இடிந்து விழும் நிலையில் இருந்த சிறிய மண் வீடொன்றில் அவரது மகள்கள் இருவரும் வசித்து வந்தனர்.

உடனடி நடவடிக்கை எடுத்த  தூதரகம்

இந்தச் செய்தி ஊடகங்களில் வெளியானவுடன் உடனடி கவனம் செலுத்திய குவைத்தில் உள்ள இலங்கை தூதரகமும், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் தொடர்பான அமைப்பும் நிமாலி நிலுஷிகா என்ற அந்த பெண்ணை நாட்டிற்கு வரவழைக்க ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

இதனையடுத்து ஐந்து நாட்களுக்குள் விமான டிக்கெட்டுகள் அனுப்பி அவரை இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர். இந்நிலையில் தாய் நாடு திரும்புவதனை அறியாத பிள்ளைகள் பாடசாலைக்கு சென்று வீடு திரும்பியுள்ளனர்.

பாடசாலையில் இருந்து வீடு திரும்பியவர்கள் தாயை கண்டு பெரும் சந்தோசத்தில் அவரைக்கட்டிக்கொண்டு கதறியழுத புகைப்படம் ஒன்றே இவ்வாறு இணையத்தில் வைரலாகியுள்ளது