கொழும்பில் நீர் வெட்டு; நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவிப்பு!

0
371

கொழும்பில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட உள்ளன.

இந்நிலையில், கொழும்பு 11, 12, 4, 13, 14 மற்றும் 15 ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை (02-12-2022) இரவு 10.00 மணி முதல் சனிக்கிழமை (03-12-2022) பிற்பகல் 1.00 மணி வரை 15 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.