கஞ்சா ஏற்றுமதியை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கை!

0
443

ஆயுர்வேத திணைக்களத்தின் அங்கீகாரத்தின் கீழ் கஞ்சா ஏற்றுமதியை தொழிலாக அபிவிருத்தி செய்வது தொடர்பான அனைத்து சட்ட நடைமுறைகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாக உள்ளுர் மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்ட விவாதத்தின் பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (29) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

ஆயுர்வேத திணைக்களம் ஒப்புதல்

ஆயுர்வேத திணைக்களத்தின் ஒப்புதலின் கீழ் மருத்துவ குணம் கொண்ட கஞ்சா ஏற்றுமதித் தொழிலாக உருவாக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். அதற்குத் தேவையான அனைத்து சட்ட நடைமுறைகளும் தற்போது தயாராகிவிட்டன.

வரவுசெலவுத் திட்ட விவாதத்தின் பின்னர், அதனை நாடாளுமன்றத்தில் முன்வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். குறிப்பாக அதற்காக அங்கு முதலீடு செய்பவர்களிடம் இருந்து பெரிய அளவில் செக்யூரிட்டி டெபாசிட் எடுக்கிறோம்.

கஞ்சா ஏற்றுமதி தொடர்பில் அரசாங்கத்தின் புதிய தீர்மானம்! | Export Of Cannabis

ஐக்கிய நாடுகளின் சாசனத்தின்படி, குறிப்பாக ஆபத்தான மருந்துக் கட்டுப்பாட்டு வாரியம் முன்வைத்த பரிந்துரைகளின்படி, சட்ட வரைவுத் திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் வழங்கிய ஒழுங்குமுறைகளின்படி, சமூகத்திற்கு ஏதேனும் தீங்கு விளைவித்தால், முதலீட்டாளர்கள் அந்த பெரிய வைப்புத்தொகையை இழப்பார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேசமயம் இவ்வாறு சட்டங்களை உருவாக்குவதன் மூலம், 3 பில்லியன் டாலர் ஏற்றுமதி வருமானத்தை ஈட்ட முடியும் என்றும் இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்தார்.