கொழும்பு துறைமுகத்தில் 10 வருடங்களாக பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகின்றது.
அத்தோடு அதனை இரண்டு மாதங்களுக்குள் அகற்றுமாறு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.
துறைமுக அதிகார சபை மற்றும் சுங்க திணைக்களத்திற்கு துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்தில் உள்ள 108 கொள்கலன்கள் மற்றும் களஞ்சியசாலைகளை பார்வையிட்ட பின்னர் அமைச்சர் பின்வரும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.