என்னால் இலங்கையை போன்ற நிலையை உருவாக்கியிருக்க முடியும்; இம்ரான்கான்

0
397

என்னால் இலங்கையை போன்ற நிலையை உருவாக்கியிருக்க முடியும் எனினும் தான் அதனை செய்யவில்லை என பாக்கிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

ராவல்பிண்டியில் இடம்பெற்ற பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

என்னால் இலங்கையை போன்ற நிலைமையை ஏற்படுத்தியிருக்க முடியும் எனினும் நான் இஸ்லாமபாத்தை நோக்கி பேரணியாக செல்வதில்லை என தீர்மானித்துள்ளேன்.

அதோடு நாட்டில் பெரும் குழப்ப நிலைஏற்படுவதை நான் விரும்பவில்லை என கூறிய இம்ரான் ,நாட்டிற்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதை நான் விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

தனது கட்சி அனைத்து பிராந்திய தேசிய சட்டசபைகளில் இருந்தும் வெளியேறுகின்றதாக கூறிய அவர், ஊழல் முறைமையிலிருந்து வெளியேறுகின்றது எனவும் கூறினார்.

இன்னமும் ஒன்பது மாதங்களில் இடம்பெறவுள்ள தேர்தலில் தனது கட்சி வெற்றி பெறும் எனவும் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.