யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்!!

0
364

யாழ்ப்பாணம் மண்ட தீவு பகுதியில் உள்ள அட்டைப்பண்ணையில் பணிபுரிந்த இளைஞன் நேற்று (23) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற் துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் வண்ணாங்கேணி பளை பகுதியை சேர்ந்த தவராச நிதர்சன் வயது 21 என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் மண்டை தீவு பகுதியிலுள்ள அட்டைப் பண்ணையில் கடந்த காலமாக பணிபுரிந்து வந்துள்ளார்.

குறித்த இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் சடலம் யாழ் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.