தனுஸ்க குணதிலக்கவிற்கு பிணை வாங்க 38,000 டொலர்களை செலுத்திய இலங்கை கிரிக்கெட் நிறுவனம்!

0
357

பெண் விவகாரத்தில் அவுஸ்திரேலியாவில் கைதான தனுஸ்க குணதிலக்கவிற்கு பிணை வாங்குவதற்காக, இலங்கை கிரிக்கெட் நிறுவனம், அவுஸ்திரேலிய சட்ட நிறுவனம் ஒன்றுக்கு 38,000 டொலர்களை செலுத்தியுள்ளது.

அத்தோடு, இந்த தொகைக்கு மேலதிகமாக பல உதவிகளும் அவருக்கு வழங்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடுமையான நிபந்தனைகளுடன் பிணை

அதேவேளை நேற்றையதினம் கடுமையான நிபந்தனைகளுடன் சிட்னி நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்ட தனுஸ்க குணதிலக்க, வடமேல் சிட்னியில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன் ,அவரது கடவுச்சீட்டு பறிக்கப்பட்டுள்ளதுடன், இரவு வேளையில் நடமாடவும், சமூக வலைத்தளங்கள் மற்றும் டிண்டர், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளை பயன்படுத்தவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பெண் விவகாரத்தில் சிக்கிய தனுஸ்கவிற்காக பெரும் தொகை செலுத்திய இலங்கை கிரிக்கெட் நிறுவனம்! | Paid Huge Amount For Dhanuska Rape Case

மேலும் , தனுஸ்க குணதிலக்க 150,000 டொலர்கள் ரொக்கப் பிணையில் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.