கல்குவாரி இடிந்து விழுந்து விபத்து: 8 பேர் சடலமாக மீட்பு!

0
516

மிசோரம் ஹனாதியால் மாவட்டத்தில் மவுதாரில் தனியார் கல்குவாரி இடிந்து விழுந்த விபத்தில் சிக்கிய புலம்பெயர் தொழிலாளர்கள் 8 பேர் இன்று சடலமாக மீட்கப்பட்டனர்.

மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ள 4 பேரின் உடல்களை தேடும் பணியில், தேசிய மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தொழிலாளர்கள் மதிய உணவு இடைவேளை முடிந்து, மீண்டும் பணிக்கு திரும்பியபோது, நேற்று இந்த விபத்து நிகழ்ந்தது.