கோர விபத்தில் பலியான தந்தை மற்றும் மகள்! துயர சம்பவம்..

0
372

விபத்தில் தந்தை மற்றும் மகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த விபத்து சம்பவம்  மீரிகம பஸ்யால வீதியின் கொட்டகந்த பிரதேசத்திற்கு அருகில் இடம் பெற்றுள்ளது.

மீரிகமவிலிருந்து பஸ்யால நோக்கி நேற்று (14) மாலை பயணித்த காரொன்றே தந்தை மற்றும் மகள்  மேலும் மோதியதில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

உயிரிழந்த  தந்தைக்கு 54 வயது எனவும் மகளுக்கு 14 வயது எனவும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய  தப்பிச்சென்ற காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மேலதிக வகுப்பு நிறைவடைந்ததன் பின்னர் மகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றபோதே இந்த துயர சம்பவம் இடம்பெற்றதாக தெரியவருகின்றது