பிக்பாஸ் வீட்டில் கதறி அழுத ஜனனி! காரணம் என்ன?

0
558

பெரும் விறுவிறுப்பாக பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கின்றது. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் டாஸ்க் தொடங்கியதில் இருந்தே போட்டியாளர்களிடையே வாக்குவாதங்களும் பிரச்னைகளும் ஏற்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் 33-வது நாளிற்கான் இரண்டாவது ப்ரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில் இவ்வாரம் முழுவதும் பிக்பாஸ் வீட்டில் டாஸ்க் உட்பட அனைத்து நிகழ்வுகளிலும் சிறப்பாக பங்கெடுக்காத ஒரு நபரை தேர்வு செய்யுமாறு பிக்பாஸ் கூறுகிறார்.

அப்போது விக்ரமன் எழுந்து வந்து ஜனனியின் பெயரை கூறுகிறார். அதற்கு ஜனனி காரணம் கேட்க அவரும் விளக்குகிறார். அபோது அமுதவாணன் மற்றும் விக்ரமன் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

அதனை தொடர்ந்து  நானே ஜெயில் உள்ளே போறேன் வாக்குவாதம் பன்னாதீங்கனு கூறும் போதே கதறி அழுகிறார் ஜனனி.