கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு ‘ஜனநாயக பொன்’ விருது!

0
328

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஐ.சம்பந்தனுக்கு ‘ஜனநாயக பொன் விருது’ வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருது ‘இன்ஸிரியூட் ஒப் பொலிட்டிக்ஸ்’ நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக தன்னை அர்ப்பணித்த மூத்த அரசியல் பிரமுகரை அங்கீகரிப்பதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகின்றது.

‘இன்ஸிரியூட் ஒப் பொலிட்டிக்ஸ்’ நிறுவனத்தின் வருடாந்த டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இலங்கை அறக்கட்டளை நிறுவனத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.

இந்த வருடாந்த டிப்ளோமா வழங்கும் விழாவில் ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கம் ஆகிய பாடங்களுக்காகத் தன்னை அர்ப்பணித்த புகழ்பெற்ற அரசியல் பிரமுகர்களின் மதிப்பீடு நடத்தப்படுகின்றது.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு விருது!(Photos) | Award R Sampanthan

வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும்

அதற்கமைய, அதில் இரா.சம்பந்தன் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் ஜனநாயகப் பொன் விருதைப் பெற்றார். நான்கு தசாப்த கால நாடாளுமன்ற வாழ்க்கையில் ஜனநாயகத்துக்காகச் சம்பந்தன் காட்டிய அர்ப்பணிப்பை மதிப்பிடுவதே இதன் நோக்கமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு விருது!(Photos) | Award R Sampanthan

மேலும் இந்த நிகழ்வில் முன்னாள் சபாநாயகரும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவருமான கரு ஜயசூரியவும் கலந்து கொண்டார்.