2022 அக்டோபரில் நடைபெற்ற உலக யூத் ஸ்க்ரேபிள் சாம்பியன்ஷிப் 2022 இல் இலங்கையின் யூத் ஸ்க்ரேபிள் அணி பரிசை வென்றுள்ளது.
போட்டியின் குழுநிலையில் அதிஷா திஸாநாயக்க வெற்றிபெற்றதுடன், சக வீராங்கனை சண்டலி விதானகே இரண்டாவது இடத்தைப் பெற்றார்.
பிரித்தானியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பாகிஸ்தான், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், இந்தியா, மலேசியா, தாய்லாந்து, நைஜீரியா, ஹாங்காங், சிங்கப்பூர், ஜெர்மனி, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 86 வீரர்களுடன் இந்த ஆண்டு மூன்றாவது முறையாக ஆன்லைனில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.
கேட்வே கல்லூரியைச் சேர்ந்த 13 வயது அதிஷா திசாநாயக்க ஒட்டுமொத்தமாக 5வது இடத்தைப் பிடித்தது மட்டுமல்லாமல் 16 வயதுக்குட்பட்ட சம்பியனாகவும் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.