2023ஆம் ஆண்டு குறித்த பாபா வங்காவின் சில்லிட வைக்கும் கணிப்புகள்..!

0
799

2023ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் சில்லிட வைக்கும் கணிப்புகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பாபா வெங்கா கண்தெரியாதவர். பல்கேரியாவைச் சேர்ந்தவர். 1911 ஆம் ஆண்டு பிறந்த இவர் தனது 12வது வயதில் பார்வையை இழந்தார். 1996ல் தனது 84வது வயதில் உயிரிழந்தார். அவரது கணிப்புகளில் பல உண்மையாகியுள்ளன.

அதன்படி 2022-ல் சில நாடுகளில் தண்ணீர் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும் மற்றும் சில நாடுகளில் வெள்ளம் காரணமாக நிலைமை மோசமடையும் என கணித்திருந்தார். அதன்படியே இந்தாண்டு போர்ச்சுகல் மற்றும் இத்தாலியில் பல பகுதிகளில் வறட்சி ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், அவுஸ்திரேலியா மற்றும் ஆசிய நாடுகள் 2022 இல் கடுமையான வெள்ளத்தை எதிர்கொண்டன.

2023க்கான பாபா வங்காவின் கணிப்புகள் என்னென்ன?

பாபா வாங்காவின் கணிப்புகளின்படி, ஒரு பெரிய நாடு உயிரியல் ஆயுதங்களால் மக்களை தாக்கும் என கூறப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையைப் பார்த்தால், ரஷ்யா-உக்ரைன் போர் முழு உலகிற்கும் உண்மையான அச்சுறுத்தலாக மாறியுள்ளது மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதாக பல முறை அச்சுறுத்தியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

2023ல் உலகம் இருளில் மூழ்கும்! பல நாடுகளில் கடுமையான நோய்... பாபா வங்காவின் திக் திக் கணிப்பு | Baba Vanga Prediction For 2023 Revealed

2023 ஆம் ஆண்டில் சூரிய புயல் அல்லது சூரிய சுனாமி ஏற்படும், இது கிரகத்தின் காந்த கவசத்தை கடுமையாக சேதப்படுத்தும்.

2023 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் இருளில் மூழ்கும். வேற்றுகிரகவாசிகள் (ஏலியன்ஸ்) பூமியைத் தாக்கலாம் மற்றும் மில்லியன் கணக்கான மக்கள் அதில் இறக்க நேரிடும்.

அணுமின் நிலையத்தில் ஒரு வெடிப்பு ஏற்படலாம், இதன் காரணமாக நச்சு மேகங்கள் ஆசியா கண்டத்தை மூடிவிடும், இதன் விளைவாக பல நாடுகள் கடுமையான நோய்களால் பாதிக்கப்படும்.

2023-க்குள் மனிதர்கள் ஆய்வகங்களில் பிறப்பார்கள். இங்கிருந்து மக்களின் தன்மை மற்றும் தோலின் நிறம் தீர்மானிக்கப்படும். இதன் பொருள் என்னவெனில் பிறப்பு செயல்முறை முற்றிலும் கட்டுப்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. 

https://www.taatastransport.com/