கடவுள் புண்ணியத்தில் தனக்கு பெண்களுக்குப் பஞ்சமில்லை என நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த (Sanath Nishantha) தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பதிவில் வெளியிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) தலைமையில் ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற “மீண்டும் எழுக” என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற பேரணியில் இளம் பெண்கள் குழுவை பார்க்கும் புகைப்படம் ஒன்றுக்கு இணையத்தில் வைரலானது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஒருவருக்கு முகநூல் ஊடாக பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவ்வுலகில் முக்கியமாக மூன்று வகையான ஆண்கள் இருப்பதாகவும், ஒரு வகை பெண்களை விரும்புவதாகவும், மற்றைய வகை ஆண்களை விரும்புவதாகவும், மூன்றாவது வகை அயோக்கியர்கள் எனவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த மூன்று வகைகளிலும் அவர் சரியான வகை மனிதர் என்பதை அவர் இதன் போது வலியுறுத்துகிறார்