கள்ள காதலனின் கைகளை வெட்டிய கணவன்; இலங்கையில் சம்பவம்!

0
426

காலி நகரில் பெண்ணொருவரின் கணவனும் , கள்ளக்காதலனும் காலி நகரில் நேருக்கு நேர் சந்தித்தபோது, கணவன் கள்ள காதலனின் கைகள் இரண்டையும் வெட்டியுள்ளார்.

திருமணமான பெண்ணொருவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த நபரொருவர் சில நாட்களுக்கு முன்னர் அப்பெண்ணை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில் குறித்த பெண்ணின் கணவனும் கள்ளக்காதலனும் நேற்று காலி நகரில் நேருக்கு நேர் சந்தித்துள்ளனர்.

இச்சந்தர்ப்பத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கணவன் கள்ளக்காதலனின் கைகள் இரண்டையும் வெட்டியுள்ளார்.

இச் சம்பவத்தை அடுத்து அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார், கள்ளக்காதலனை வைத்திய சாலையில் சேர்த்துள்ளனர். மேலும் கணவன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  

https://www.taatastransport.com/