கொத்து ரொட்டி வாங்க சென்றவர் மரணம்!

0
450

தீபாவளி தினத்தில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகலில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான ( 38 வயது) ராஷேந்திரன் ஜெயக்குமார் என்பவரே கொல்லப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் கம்பளை புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணிக்கட்டி தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம்

லெவலன் தோட்டத்தில் இருந்து இளைஞர் குழு ஒன்று மணிக்கட்டி தோட்டத்தில் இருக்கும் உணவகம் ஒன்றுக்கு கொத்து ரொட்டி வாங்குவதற்காக வருகை தந்துள்ளனர்.

இதன் போது அந்த பகுதியில் இருந்த இளைஞர்களுக்கிடையில் வாய்த்தர்க்கம் உக்கிரமடைந்த நிலையில் இரு குழுக்கள் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.இதன் போது 5 பேர் காயங்களுக்குள்ளாகி கலஹா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்பு அதில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

கொத்து வாங்க சென்றவர் மரணம் | The One Who Went To Buy Bunch Died

சம்பவம் தொடர்பில் புப்புரஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.