மாபெரும் பேரணிக்கு தயாராகும் மஹிந்த!

0
375

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மறுசீரமைப்பு பேரணியின் அடுத்த பொதுக்கூட்டம் புத்தளம் ஆராச்சிக்கட்டில் நடைபெறவுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நாளை இந்த பேரணி நடைபெறவுள்ளதாக தெரியவந்துள்ளது.

“சாம்பலில் இருந்து எழுவோம்” எனும் தொனிப்பொருளில் இந்த பேரணி நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் நாவலப்பிட்டிய நகரத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு வெளியிடப்பட்ட நிலையில் மீண்டும் பொதுக்கூட்டம் நடத்தப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.