யாழ்ப்பாணம் பருத்தித்துறை – புலோலி சிங்கநகர் பகுதியில் உள்ள தோட்டக் கிணற்றில் இருந்து இரண்டு இளைஞர்களின் சடலங்கள் கரையொதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த இளைஞர்களின் சடலம் நேற்று (24) இரவு மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
பருத்தித்துறை, பன்னங்காடு பகுதியைச் சேர்ந்த சுசேந்தகுமார் சசிகாந் (வயது-24) மற்றும் மந்திகை உபயகதிர்காமம் பகுதியைச் சேர்ந்த கணேசலிங்கம் லம்போசிகன் (வயது-24) ஆகிய இருவருமே சம்பவத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் சில இளைஞர்கள் சேர்ந்து தீபாவளி கொண்டாட்டத்தில் இருந்த போது, ஒருவர் தவறுதலாக கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். அவரை காப்பாற்ற அடுத்த இளைஞரும் கிணற்றில் குதித்துள்ளார்.
இதையடுத்து அருகில் இருந்த ஏனைய இளைஞர்களால் ஊரவர்களை உதவிக்காக அழைத்து கிணற்றில் இருந்தவர்களை மீட்டு யாழ்ப்பாணம் – பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போதிலும் அவர்கள் வைத்தியசாலைக்கு அனுமதிக்க முன்னரே உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் இளஞர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.