சிங்கள பெளத்த சக்தி அரசு இயந்திரத்தையும் விட பலமாக செயற்படுகிறது – மனோ கணேசன்

0
442

திருக்கோணேஸ்வர விவகாரம் தொடர்பில் கட்சி அரசியலை தள்ளி வைத்து விட்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு (Douglas Devananda) ஈழத்தமிழர்கள் ஆதரவும் அழுத்தமும் கொடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் (Mano Ganesan) தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அடிப்படைவாத சிங்கள பெளத்த சக்தி ஒன்று அரசு இயந்திரத்தையும் விட பலமாக செயற்படுகிறது. இதை தடுக்கும் சக்தி கூட்டமைப்புக்கு கிடையாது. இந்தியாவை தவிர சர்வதேச சமூகத்துக்கு இது தொடர்பில் அக்கறை எதுவும் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழர்கள் இருவருக்கு ஆதரவு வழங்கவேண்டும்! மனோ கணேசன் | Eealam Tamils Should Support Douglas Mano Advice