யாழில் சோகம்; தீயில் எரிந்து சடலமாக மீட்கப்பட்ட தம்பதியினர்!

0
268

வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதி ஏஜிஏ ஒழுங்கையில் உள்ள வீடொன்றில் கணவனும் மனைவியும் தீக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் சடலமாக கண்டறியப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை 4.15 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அங்கு சரவணபவா ரஞ்சித்குமார் (வயது 30) அவரது மனைவி கிருசாந்தினி (வயது 26) என்ற இருவருமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட தம்பதியினர் | Couple Found Dead At Home

விசாரணை

தம்பதி உறங்கிய அறையில் தீ பற்றி எரிவதைக் கண்டு வீட்டிலிருந்தவர் அறையை உடைத்து உள்நுழைந்த போது இருவரும் தீயில் எரிந்து சடலமாகக் காணப்பட்டுள்ளனர் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தீ ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.