ஜனாதிபதி ரணிலின் விசேட உத்தரவு

0
322

வறுமையில் வாடும் பாடசாலை மாணவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

உணவு பெறுவதற்கு பணமின்மையால் பாதிக்கப்படும் எந்தவொரு மாணவர்களுக்கும் சிறுவர்களுக்கும் தேவையான உதவிகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

விசேட வேலைத்திட்டம்

ஜனாதிபதி ரணில் பிறப்பித்துள்ள விசேட உத்தரவு | Sri Lanka School Food Today

அதற்கமைய ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்காக 0114 35 46 47 என்ற விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது