சீனாவின் முன்னாள் நீதி அமைச்சருக்கு மரண தண்டனை!

0
563

சீனாவின் முன்னாள் நீதி மந்திரிக்கு அதிகார துஷ்பிரயோகம், ஊழல் ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் நிதி பிரிவுடன் தொடர்புடைய ஊழல்களை ஒழிக்கும் தீர்மானத்துடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில், பல உயர்மட்ட அந்தஸ்திலான அதிகாரிகள் சிக்குகின்றனர். இதன்படி நிதி சார்ந்த அரசு துறையின் பல மூத்த அதிகாரிகள் விசாரணையின் அடிப்படையில் கண்டறியப்பட்டு கட்சியில் இருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

சீனாவின் முன்னாள் நீதி மந்திரி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு உயரதிகாரியாக ஃபூ ஜெங்குவா (Fu Zhenghua) பதவி வகித்தவர். அவர் தனது பதவி காலத்தில் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் புரிந்ததற்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி சீன வெளியிட்டு உள்ள செய்தியில் ஜிலின் மாகாணத்தில் உள்ள சாங்சன் நகரில் அமைந்த மக்கள் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

அவர் தன்னுடைய பதவி காலத்தில் நேரடியாகவோ அல்லது தனது உறவினர்கள் வழியாகவோ வர்த்தக நடைமுறைகள், சட்டப்பூர்வ வழக்குகள் ஆகியவற்றில் மற்றவர்கள் பலனடையும் வகையில் தனது அதிகாரத்திற்கு உட்பட்ட விசயங்களை செய்து முடிப்பதற்காக சட்டவிரோத வகையில் நடந்து உள்ளார்.

இதன்படி, ரூ.58.83 கோடி அளவுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களாக முறைகேடாக பெற்றுள்ளார். இதனை கோர்ட்டில் அரசு வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டாக முன்வைத்துள்ளனர்.

இதனடிப்படையில் அவருக்கு மரண தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.