இலங்கையில் தாய்ப்பாலை விழுங்கிய சிசு மரணம்!

0
539

தாய்ப்பாலை விழுங்கிய ஒன்றரை மாத கைக்குழந்தை உயிரிழந்துள்ளதாக ஹொரவ்பொத்தான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், 77 ஹொரவ்பொத்தான கனுவ, மொரகேவவில் வசிக்கும் பத்திரன புஷ்பகுமார என்பவரது நிபுல சஞ்சனா என்ற குழந்தை உயிரிழந்துள்ளது.

குறித்த குழந்தை தாயின் பாலை அருந்திக் கொண்டிருந்த போது தாயின் பால் சிக்கியுள்ளதாகவும் அச்சமயம் குழந்தை ஹொரவ்பொத்தான வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.