சர்வதேச நீதிமன்றில் இலங்கை பாரப்படுத்த வேண்டும்! – சுமந்திரன்

0
361

சர்வதேச நீதிமன்றில் இலங்கை பாரப்படுத்தப்பட வேண்டும் என கூட்டமைப்பின் சுமத்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் போர்க்குற்றம் புரிந்தோரை உலக நாடுகள் இலக்கு வைக்க வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் சபை வலியுறுத்தியுள்ளது.

“இலங்கையில் தேசிய மட்டத்தில் பொறுப்புக்கூறலுக்கான முன்னேற்றம் இல்லாத நிலையில், இலங்கையில் சர்வதேச சட்டத்தின் கீழ் இழைக்கப்பட்ட குற்றங்களை விசாரிப்பதற்கும், விசாரணை செய்வதற்கும், வெளிநாட்டிலும் உலகளாவிய அதிகார வரம்பிலும் உள்ள வழிகளைப் பயன்படுத்தி பொறுப்புக்கூறல் முயற்சிகளை முன்னெடுக்குமாறு மற்ற நாடுகளைக் கோருகின்றோம் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையார் தெரிவித்துள்ளார்.