நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது தூங்கிய விமானிகள்!

0
328

விமானம் 37 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது தூங்கிய விமானிகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சூடானில் இருந்து எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா நகரத்திற்கு போயிங் 737 ரக விமானம் சென்று கொண்டிருந்தது.

விமானம் நடுவானில் பறந்துக்கொண்டிருந்த போது தூங்கிய விமானிகள்! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் | Pilots Who Fell Asleep Mid Air Shocking Incident

இந்த விமானம் நடுவானில் 37 ஆயிரம் படி பறந்து கொண்டிருந்த போது விமானிகள் இருவரும் விமானத்தை ஆட்டோ பைலட் எனப்படும் தானியங்கி இயக்க முறையில் விமானம் இயங்குவதற்கு செட் செய்து விட்டு தூங்கி விட்டனர்.

விமானம் நடுவானில் பறந்துக்கொண்டிருந்த போது தூங்கிய விமானிகள்! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் | Pilots Who Fell Asleep Mid Air Shocking Incident

இதனால், விமானம் அடிஸ் அபாபா விமான நிலையத்தை தாண்டி சென்றது. இதைக் கவனித்த விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு (ஏடிசி) அதிகாரிகள், விமானிகளை தொடர்பு கொள்ள முயன்றனர்.

விமானம் நடுவானில் பறந்துக்கொண்டிருந்த போது தூங்கிய விமானிகள்! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் | Pilots Who Fell Asleep Mid Air Shocking Incident

ஆனால், இதி பலன் கிடைக்கவில்லை. சிறிது நேரத்தில் விமானத்தின் தானியங்கி இயக்கம் நின்று அலாரம் ஒலித்து இருக்கிறது.

அதன்பிறகே விழித்த விமானிகள் இருவரும் விமானத்தை விமான நிலையத்தில் தரையிறக்கியுள்ளனர்.

இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.