நியூயார்க்கில் உள்ள மகாத்மா காந்தி சிலை மர்ம நபர்களால் தாக்கப்பட்டது!

0
310

அமெரிக்கா – நியூயார்க்கில் உள்ள மகாத்மா காந்தி சிலை மர்ம நபர்களால் இரண்டு வாரங்களில் இரு முறை சேதப்படுத்தப்பட்டுள்ளது.

நியூயார்க்கில் உள்ள ஒரு இந்து கோவிலுக்கு முன்னால் இருந்த மகாத்மா காந்தியின் சிலை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

ஓகஸ்ட் 16-ம் திகதி அதிகாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 

சம்பவம் நடந்த குயின்ஸில் உள்ள கோவிலுக்கு அருகே சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் ஆபாச வார்த்தைகளை எழுதி வைத்து சென்றுள்ளனர்.

நியூயார்க்கில் உள்ள மகாத்மா காந்தி சிலை மர்ம நபர்களால் நேர்ந்த நிலை! | Mahatma Gandhi Statue New York Vandalized

இந்த மாதம் மட்டும் அமெரிக்காவில் காந்தி சிலை சேதப்படுத்தப்படுவது இது 2-வது முறையாகும். இரண்டு வாரங்களுக்கு முன்பு ஓகஸ்ட் 3 அன்று இதே சிலை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் அதே சிலை மீது நடந்த 2-வது தாக்குதலில் சிலை முற்றிலும் தகர்க்கப்பட்டுள்ளது.

நியூயார்க்கில் உள்ள மகாத்மா காந்தி சிலை மர்ம நபர்களால் நேர்ந்த நிலை! | Mahatma Gandhi Statue New York Vandalized

இந்நிலையில், காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, இந்திய தூதரக அதிகாரிகள் கூறுகையில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதால் அமெரிக்க அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம் என தெரிவித்துள்ளனர்.