காலிமுகத்திடலில் போலீசார் அதிரடி நடவடிக்கை!

0
544

காலிமுகத்திடலில் இருந்து போராட்டக்காரர்களை அகற்றியதற்கும், அரசாங்கத்தின் அடக்குமுறைக்கும் எதிர்ப்பு தெரிவித்து காலிமுகத்திடலில் பொது மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி போராட்ட களத்திற்கு வருகை தந்த பொலிஸார் மக்களின் போராட்டத்தை கலைக்குமாறு அறிவித்துள்ளனர்.

இருப்பினும் பொலிஸாரின் அனுமதியை பெற்று சற்றுநேரம் போராட்டத்தில் ஈடுபட மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

காலிமுகத்திடலில் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை! | Action Taken By The Police In The Vacancy

இந்நிலையில், போராட்டம் நிறைவடைவதற்கு முன்னரே பொலிஸ் அதிகாரியொருவர் போராட்டக்காரர்களை கைது செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

போராட்டக்காரர்கள் தமது போராட்த்தை கைவிட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.