தம்பியை நாட்டுக்கு அழைக்கும் அண்ணன்!

0
403

நாட்டில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விரைவில் நாடு திரும்ப வேண்டும் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து மக்கள் முன்னெடுத்த போராட்டம் வன்முறையாக வெடித்ததில் நாட்டை விட்டு ஜூலை 9ஆம் திகதி வெளியேறிய கோட்டாபய ராஜபக்ச ஒரு மாதத்திற்கும் மேலாக வெளிநாட்டில் உள்ளார்.

ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் பிரவேசித்ததும் வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி தற்போது மாலைதீவு, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து தாய்லாந்துக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் வேறு நாடுகளில் வாழாமல் தாய் நாட்டிற்கு திரும்புமாறு மகிந்த ராஜபக்ச விடுத்த கோரிக்கைக்கு கோட்டாபய ராஜபக்சவிடம் இருந்து உறுதியான பதில் எதுவும் கிடைக்கவில்லை என கூறப்படுகின்றது.

தம்பியை நாட்டுக்கு அழைக்கும் அண்ணன்! | The Brother Invites His Brother To The Country

அதேவேளை கோட்டாபய இலங்கையில் வாழ்வதற்கு எந்தவித பாதுகாப்பின்மையும் இல்லை என பாதுகாப்பு தரப்பினர் தற்போது உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதேசமயம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கோட்டே கல்யாணி சாமகிரி தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்க தேரரைப் பார்க்கச் சென்ற போது, ​​பேராசிரியர் கொட்டப்பிட்டிய ராகுல தேரர், முன்னாள் ஜனாதிபதி குறித்தும் கேட்டுள்ளார்.

அத்துடன் “ஜனாதிபதி கோட்டாபய இலங்கைக்கு வந்து சுதந்திரமாக இருப்பதை சாத்தியமாக்குங்கள்” என்று கோரிக்கை விடுத்ததாகவும் அதற்கு நாட்டின் தற்போதைய ஜனாதிபதி ரணில் எதுவும் கூறவில்லை எனவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.