பிரபாகரன் கொலைக்கான காரணம் இதுதான்! டலஸ் அழகப்பெரும தகவல்

0
820

பிரபாகரன் உட்பட நான்கு தலைவர்கள் நாட்டில் பிரபுத்துவ அரசியலுக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் என முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும (Dullas Alahapperuma) தெரிவித்துள்ளார்.

சிங்கள தொலைகாட்சி ஒன்றின் நேர்காணலில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே டலஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பிரபாகரன் கொலை செய்யப்பட்டதற்கு இதுவே காரணம்! டலஸ் பகீர் தகவல் | This Is The Reason Why Prabhakaran Was Murdered

இலங்கையின் வரலாற்றில் சுதந்திரத்திற்கு பின்னர் நான்கு பிரபுக்கள் குடும்பங்களை சேர்ந்தவர்களே நாட்டை நீண்டகாலம் ஆட்சி செய்துள்ளனர்.

சேனாநாயக்க குடும்பம், ஜெயவர்தன குடும்பம், பண்டாரநாயக்க குடும்பம் மற்றும் ராஜபக்ஷ குடும்பம் என நான்கு அரசியல் பிரபுக்களின் குடும்பங்களே நாட்டை நீண்டகாலம் ஆட்சி செய்தன.

இடையில் சில ஆண்டுகள் ரணசிங்க பிரேமதாச, டி.வி.விஜேதுங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகிய பிரபுத்துவ அரசியலில் இருந்து வராத கீழ் மட்டத்தை சேர்ந்தவர்கள் நாட்டை ஆட்சி செய்தனர்.

பிரபாகரன் கொலை செய்யப்பட்டதற்கு இதுவே காரணம்! டலஸ் பகீர் தகவல் | This Is The Reason Why Prabhakaran Was Murdered

இந்த அரசியல் பிரபுக்களின் ஆட்சிக்கு எதிராக பிரபுக்கள் அற்றவர்களின் அரசியலுக்காகவே சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி போன்றவை ஆரம்பிக்கப்பட்டன. பிரபுக்களின் அரசியலுக்கு எதிராக சிலர் கிளர்ந்து எழுந்தனர்.

நாடாளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற வாக்கெடுப்பின் போது என்ன நடந்தது வரலாற்றில் முதல் முறையாக இரண்டு பிரபுக்கள் குடும்பங்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்துகொண்டனர்.

பிரபாகரன் கொலை செய்யப்பட்டதற்கு இதுவே காரணம்! டலஸ் பகீர் தகவல் | This Is The Reason Why Prabhakaran Was Murdered

ஜெயவர்தன, ராஜபக்ச குடும்பங்கள் டலஸ் அழகபெருமவுக்கு எதிராக ஒரு முகாமில் இணைத்தனர். இதற்கான காரணம் என்னவென்று தெரியாது.

நான் போட்டியிட்டதன் பின்னணியில் இருந்தவர்கள் நான் குறிப்பிட்டது போல் வரலாற்றில் பிரபுத்துவ அரசியலுக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள். பிரபுக்கள் அற்ற அரசியல் முன்னெடுப்பதற்காக கடந்த 50 ஆண்டுகளில் நான்கு பிரதான பாத்திரங்களை நாம் பார்த்திருக்கின்றோம்.

விஜயகுமாரதுங்க, ரோஹன விஜேவீர, ரணசிங்க பிரேமதாச, வேலுப்பிள்ளை பிரபாகரன். இவர்களின் அரசியலை நான் நியாயப்படுத்தவில்லை. எனினும் அவர்கள் பிரபுக்கள் அற்ற அரசியலுக்காக குரல் கொடுத்தனர்.

பிரபாகரன் கொலை செய்யப்பட்டதற்கு இதுவே காரணம்! டலஸ் பகீர் தகவல் | This Is The Reason Why Prabhakaran Was Murdered

பிரபுக்கள் அற்ற அரசியலுக்காக குரல் கொடுத்த இந்த நான்கு பேரும் இறுதியில் வீதியில் கொலை செய்யப்பட்டனர்.

ஆனால், பிரபுக்கள் மக்களின் தோளின் மீது மிக கௌரவமாக பயணத்தை நோக்கி சென்றனர். இதுதான் வரலாறு எனவும் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

எனது தொலைபேசி 24 மணிநேரமும் ஒட்டு கேட்கப்படுகிறது. இதற்கு யார் உத்தரவிட்டார்கள் என்பதை இனி வரும் காலங்களில் வெளிப்படுத்துவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.