இலங்கையில் தலைதூக்கும் துப்பாக்கிச்சூடு!

0
344

புத்தளம் – கரம்பை பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

நுரைச்சோலை, தளுவ பகுதியை சேர்ந்த எம்.எல்.அமரநாயக்க என்பவரே இவ்வாறு துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு சகோதரர்களுக்கு இடையில் இடம்பெற்ற வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த மூத்த சகோதரர் தனது இளைய சகோதரர் மீது மேற்படி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இலங்கையில் தலைதூக்கும் துப்பாக்கிச்சூடு! | Shooting In Sri Lanka

சந்தேக நபர், கல்கடஸ் எனும் வகையைச் சேர்ந்த உள்ளூர் துப்பாக்கி ஒன்றினை இதற்கு பயன்படுத்தியுள்ளார் என மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபர் சிகிச்சைக்காக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.